

மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி, அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (40) என்பவரது வீட்டின் அருகே கடந்த 27-ம் தேதி பகலில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பாலமுருகன் சிறுமியைப் பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
இதையறிந்த சிறுமியின் பெற் றோர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் பாலமுருகன் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.