போக்குவரத்து பணியாளர்களுக்கு நிலுவை பணப்பலன்களை வழங்க வேண்டும் அரசுக்கு ஐஎன்டியுசி கோரிக்கை

போக்குவரத்து பணியாளர்களுக்கு  நிலுவை பணப்பலன்களை வழங்க வேண்டும் அரசுக்கு ஐஎன்டியுசி கோரிக்கை
Updated on
1 min read

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஈரோடு மண்டல தேசிய தொழிலாளர்கள் சங்க (ஐஎன்டியுசி) செயற்குழு கூட்டம் நிர்வாக தலைவர் கே.ரவி தலைமையில் ஈரோட்டில் நடந்தது.

மண்டல பொதுச்செயலாளர் துரைசாமி, பேரவை செயலாளர் அய்யப்பன், துணை தலைவர் ரவி, துணை செயலாளர் மனோகரன், பொருளாளர் பழனிசாமி, சங்க நிர்வாகிகள் மக்பூல், பாபு, விஸ்வநாதன், சிவகுமார், ஞானசேகரன், செந்தில், பார்த்த சாரதி, பிரபாகரன், யாசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் புதிய ஊதிய ஒப்பந்தங்களை உடனே மேற் கொள்ள வேண்டும், போக்கு வரத்து பணி யாளர்களுக்கு நிலுவையில் உள்ள அனைத்து பணப்பலன்களையும் உடனே வழங்க வேண்டும், 40 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும், கரோனா தொற்றினால் உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு அரசு இழப்பீட்டுத் தொகையாக ரூ.50 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும், மத்திய அரசு கொள்கை முடிவாக அறிவித்துள்ள பஞ்சப்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்க வேண்டும் என்பதுள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in