113-வது ஜெயந்தி விழாவையொட்டி திருச்சி, நாகை, கும்பகோணம், பரவாக்கோட்டையில் தேவர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு ஊர்வலமாக முளைப்பாரி, பால்குடம் எடுத்து வந்து பெண்கள் வழிபாடு

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியையொட்டி நேற்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் அமைச்சர்கள் என்.நடராஜன், எஸ்.வளர்மதி மற்றும் அதிமுகவினர்.படம்: ஜி.ஞானவேல்முருகன்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியையொட்டி நேற்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் அமைச்சர்கள் என்.நடராஜன், எஸ்.வளர்மதி மற்றும் அதிமுகவினர்.படம்: ஜி.ஞானவேல்முருகன்
Updated on
2 min read

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113-வது ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியிலுள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தேவர் ஜெயந்தி விழாவை யொட்டி, அகில இந்திய பார்வர்டு பிளாக் (கதிரவன்) சார்பில் மாநிலச் செயலாளர் வெங்கடேசன், முத்து ராமலிங்கத் தேவர் நல அறக் கட்டளை சார்பில் முருகையாத் தேவர் ஆகியோர் தலைமையில் தேவர் சிலை அருகே யாகம் வளர்க்கப்பட்டு, சிறப்பு வழிபாடு கள் நடத்தப்பட்டன.

அதைத்தொடர்ந்து, அதிமுக சார்பில் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திமுக சார்பில் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன் உள்ளிட்டோரும், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமையில் மாநகரச் செயலாளர் மு.அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, கே.என்.அருண் நேரு உள்ளிட்டோரும் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதேபோல, காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர்கள் ஜவகர், கோவிந்தராஜ் உள்ளிட் டோரும், அமமுக சார்பில் மாநகர் மாவட்டச் செயலாளர் ஜெ.சீனி வாசன் தலைமையில் மாநில அமைப்புச் செயலாளர் சாருபாலா தொண்டைமான் உள்ளிட்டோரும், மதிமுக சார்பில் மாவட்டச் செயலா ளர்கள் வெல்லமண்டி சோமு, சேரன், மணவை தமிழ்மாணிக்கம் உள்ளிட்டோரும், பாஜகவினர் மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையிலும் மாலை அணிவித்தனர்.

தேமுதிக சார்பில் மாநகர் மாவட்டச் செயலாளர் டி.பி கணேசன் உள்ளிட்டோரும், தமாகா சார்பில் மாவட்டத் தலைவர்கள் நந்தா செந்தில், குணா உள்ளிட்டோரும், பாமக சார்பில் மாவட்டச் செயலாளர் திலீப் குமார் உள்ளிட்டோரும், இந்து முன்னணியினர் மாநில பொதுச் செயலாளர் காடேஸ்வர சுப்பிரமணியன் தலைமையிலும், மூவேந்தர் முன்னேற்ற கழகத்தினர் அருள்ராஜ் தலைமையிலும், அகில இந்திய மூவேந்தர் முன்னணியினர் மணிவேல் தலைமையிலும், பார்வர்டு பிளாக் (பசும்பொன்) கட்சியினர் மாநிலச் செயலாளர் காசி மாயத்தேவர் தலைமையிலும் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

இதுதவிர, நாம் தமிழர், முக்கு லத்தோர் புலிப்படை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பிலும் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கப் பட்டது. தாராநல்லூர், துவாக்குடி, உறையூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண் கள் ஊர்வலமாக முளைப்பாரி, பால்குடம் எடுத்து வந்து தேவர் சிலைக்கு வழிபாடு நடத்தினர்.

தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் சுப்பிரமணியபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முத்துராமலிங்கத் தேவரின் படத்துக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ப.குமார் உள்ளிட் டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

கரூரில்...

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவில், திமுக மாவட்ட பொறுப்பாளரும், அரவக் குறிச்சி எம்எல்ஏவுமான வி.செந் தில்பாலாஜி தேவர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கும்பகோணத்தில்...

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, மத்திய மண்டல ஐ.ஜி. எச்.எம்.ஜெய ராம் தலைமையில், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் மேற் பார்வையில் 750 போலீஸார் கும்ப கோணத்தில் நேற்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டத்தில்...

முப்பெரும் விழா

நாகப்பட்டினத்தில்...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in