Published : 31 Oct 2020 03:14 AM
Last Updated : 31 Oct 2020 03:14 AM

கரூர் புதிய ஆட்சியர் பொறுப்பேற்பு

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரூர் மாவட்ட புதிய ஆட்சியராக சு.மலர்விழி நேற்று பொறுப் பேற்றுக்கொண்டார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யத்தின் குரூப் 1 தேர்வு மூலம் கடந்த 2001-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியில் சேர்ந்தார் சு.மலர்விழி. 2007-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றினார். 2009-ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி அலுவலராக பதவி உயர்வு பெற்றார். 2013-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை வணிக வரித் துறை இணை ஆணையராகப் பணியாற்றினார்.

மாவட்ட ஆட்சியராக 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை சிவகங்கையிலும், 2018-ம் ஆண்டு முதல் தர்மபுரியிலும் பணியாற்றினார். தற்போது கரூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார். திருமணமான இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x