ஓய்வூதிய ஆணை வழங்கல்

ஓய்வூதிய ஆணை வழங்கல்
Updated on
1 min read

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தன்னுடைய ஓய்வூதிய உறுப்பினர்களுக்கு பணி ஓய்வு பெறும் நாளில் மாத ஓய்வூதிய ஆணையை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின்படி ஓய்வுபெறும் நாளில் ஓய்வூதிய ஆணையை உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு தேவைப்படும் ஆவணங்களை, தொழிலாளர்களுக்கும் நிறுவன உரிமையாளர்களுக்கும் தெரியப்படுத்தி ஒரு மாதம் முன்பாகவே விண்ணப்பங்களை அளிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இத் திட்டத்தின்கீழ் திருநெல்வேலி மண்டல அலுவலகத்துக்கு உட்பட்ட நிறுவனங்களில் பணியாற்றி, இந்தமாதம் ஓய்வுபெறும் 7 வருங்கால வைப்புநிதி உறுப்பினர்களுக்கு, ஓய்வூதிய ஆணையை திருநெல்வேலி மண்டல ஆணையர் (பொறுப்பு) வீ.கலைச்செல்வன் வழங்கினார்.

நிகழ்ச்சியில், கணக்கு அதிகாரிகள் சரோஜா, சி.ஈஸ்வரமூர்த்தி, அமலாக்க அதிகாரிகள் பி.வி.ஹரிகிருஷ்ணன், பி.நாகேஸ்வரி, எஸ்.திலகர், எஸ்.சப்ரினா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in