Published : 30 Oct 2020 03:13 AM
Last Updated : 30 Oct 2020 03:13 AM

பொன்முடி மீதான குவாரி வழக்கு ஒத்திவைப்பு

விழுப்புரம்

வானூர் அருகே பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாக எம்எல்ஏ பொன்முடி, அவரது மகன் கௌதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், லோகநாதன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகிய 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரால் தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பொன்முடி, சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத் , கௌதமசிகாமணி எம்.பி., ராஜமகேந் திரன், லோகநாதன் ஆகிய 8 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் சார்பில் வழக்கறி ஞரால் மனுதாக்கல் செய்யப் பட்டது. இதையடுத்து வழக்கைவிசாரித்த நீதிபதி இளவழகன், இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x