Published : 30 Oct 2020 03:13 AM
Last Updated : 30 Oct 2020 03:13 AM

குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

சேலம்

சேலத்தில் இரண்டு பேரை குண்டர் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.

சேலம் அடுத்த மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்த ரவுடி ரஞ்சித்குமார் (24) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அவரது கூட்டாளியான தினேஷ்குமார் (28) ஆகிய இருவரையும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் கொலை மிரட்டல் வழக்கில் காரிப்பட்டி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான ரஞ்சித்குமார் மீது அடிதடி, கொலை மிரட்டல், வழிப்பறி உள்ளிட்ட 6 வழக்குகளும், தினேஷ்குமார் மீது அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட 4 வழக்குகள் நிலையில் உள்ள நிலையில், தொடர்ந்து குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி தீபாகாணிகர், சேலம் ஆட்சியர் ராமனுக்கு பரிந்துரை செய்தார். பரிந்துரையை ஆட்சியர் ஏற்றார்.

இதையடுத்து, இருவரையும் போலீஸார், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து அதற்கான உத்தரவை சிறையில் உள்ள இருவரிடமும் வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x