நெல்லையில் வழக்கறிஞர்கள் தர்ணா

நெல்லையில் வழக்கறிஞர்கள் தர்ணா
Updated on
1 min read

திருநெல்வேலியில் வழக்கறிஞர் பிரம்மா மீதான வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் மனு அளித்தனர். முன்னதாக மனுவை வாங்க அதிகாரிகள் இல்லாததால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் அங்குவந்து வழக்கறிஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளரிடம் மனு அளிக்க ஏற்பாடு செய்தனர். இதனையடுத்து வழக்கறிஞர்கள் போராட்டத்தை கைவிட்டு மனு அளித்துவிட்டு சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in