Published : 16 Dec 2021 03:05 AM
Last Updated : 16 Dec 2021 03:05 AM

24 மணி நேரத்தில் 6,984 பேருக்கு கரோனா தொற்று :

மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரம் வருமாறு:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 6,984 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 3 கோடியே 47 லட்சத்து 10,628 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை முந்தைய நாளை விட 1,431 குறைந்து, 87,562 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 247 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 76,135 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் தற் போது 98.38 சதவீதமாக உள்ளது. இது கடந்த 2020 மார்ச்சுக்கு பிறகு மிக அதிகமாகும்.

இவ்வாறு புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x