Published : 04 Nov 2021 03:11 AM
Last Updated : 04 Nov 2021 03:11 AM
இந்தியாவில் புதிதாக 11.903 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 311 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று குறைந்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 11,903 பேருக்கு புதிதாக கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 14,159 பேர் மருத்துவமனையில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் சதவிகிதம் 98.22% ஆக இருக்கிறது. நாடு முழுவதும் இதுவரை 3,36,97,740 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
1.51 லட்சம் பேருக்கு சிகிச்சை
இந்தியா முழுவதும் தற்போது 1,51,209 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கடந்த 252 நாட்களில் மிகக் குறைந்த அளவாகும். நாடு ஒரே நாளில் 311 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இது நேற்றைய உயிரிழப்பை விட குறைவு. நாடு முழுவதும் 1,07,29,66,315 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 41,16,230 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT