Published : 25 Oct 2021 03:07 AM
Last Updated : 25 Oct 2021 03:07 AM
ஜம்மு - காஷ்மீரில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவது மத்திய அரசின் நிர்வாகத் தோல்வி என்று காங்கிரஸ் மூத்த தலைவர் தாரிக் ஹமீது கர்ரா குற்றம் சாட்டியுள்ளார்.
அண்மையில் நடந்த காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் காஷ்மீரில் நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அதில், லடாக் எல்லையில் நடக்கும் சீன அத்துமீறல் மற்றும்ஆப்கானிஸ்தானில் தலிபான்ஆட்சி அமைந்தது ஆகியவற்றுக்கும், காஷ்மீரில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்களுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து காஷ்மீரை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், அக்கட்சியின் செயற்குழு உறுப்பினருமான தாரிக் ஹமீது கர்ராவிடம் தனியார் செய்தி நிறுவனம் ஒன்று நேற்று கேள்வியெழுப்பியது. அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
இந்த விவகாரத்தை பொறுத்தவரை நாம் எதையும் புறந்தள்ளி விட முடியாது. அதே சமயத்தில், காஷ்மீர் வன்முறைக்கு இதுதான் காரணம் என நாம் எதையும் அறுதியிட்டு கூற இயலாது.
காஷ்மீர் தற்போது வெளிநாட்டு சக்திகளுக்கு ஒரு சோதனைக் கூடமாக மாறியுள்ளது. காஷ்மீரை வைத்து அவை ஆட்டத்தைதொடங்கி இருக்கின்றன. இருந்தபோதிலும், காஷ்மீரில் நடக்கும் வன்முறைக்காக சீனாவையும், ஆப்கானிஸ்தானையும் நாம் குறை கூற முடியாது. ஏனெனில் அவை வெளிநாடுகள். இந்தியாவுக்குள் நடக்கும் விஷயத்திற்கு மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். காஷ்மீருக்கு பாது காப்பு வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆனால், அங்கு என்ன நடக்கிறது? அப்பாவி மக்கள் குறிவைத்து கொலை செய்யப்படுகிறார்கள். இதற்கு முழுக்க முழுக்க மத்திய அரசின் நிர்வாகத் தோல்வியே காரணம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT