Published : 16 Oct 2021 06:10 AM
Last Updated : 16 Oct 2021 06:10 AM

தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் எண்ணிக்கை 97 கோடியை கடந்தது :

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30,26,483 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட் டுள்ளன. இதையடுத்து நாட்டில் செலுத்தப்பட்ட மொத்தக் கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை, நேற்று காலை 7 மணி நிலவரப்படி 97.14 கோடியைக் கடந்துள்ளது.

இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,33,82,100 ஆக அதிகரித்துள்ளது. குண மடைந்தோர் விகிதம் தற்போது 98.07 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 16,862 பேருக்குப் புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது.

நாட்டில் கரோனாவுக்காக சிகிச்சை பெறுபவர்களின் விகிதம் தற்போது 0.60 சதவீதமாக உள்ளது. இதுவரை மொத்தம் 58.88 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனா போராளிகள் தொடர்பான 13 வீடியோக்கள் மற்றும் ஒரு புத்தகத்தை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று வெளியிட்டார். அப்போது அவர் கூறும்போது, ‘‘அக்டோபர் 18 அல்லது 19-ம் தேதி, 100 கோடி தடுப்பூசி டோஸ்கள் என்ற இலக்கை நாடு அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 100 கோடி தடுப்பூசிகள் என்ற இலக்கை அடைந்த பிறகு, விமானங்கள், கப்பல்கள், மெட்ரோ மற்றும் ரயில் நிலையங்களிலும் இந்த அறிவிப்பு வெளியாகும்’’ என்று தெரிவித்தார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x