Published : 11 Jun 2021 03:12 AM
Last Updated : 11 Jun 2021 03:12 AM
கரோனா பரவல் காரணமாக தெலங்கானா மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பஸ் போக்குவரத்து முடங்கியது. தெலங்கானா மாநிலத்திற்குள் நுழைய இ-பாஸ் கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
தற்போது கரோனா தொற்று குறைந்ததால், நேற்று முதல் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் மேலும் ஒரு மணி நேரம், அதாவது மாலை 6 மணி வரை மக்கள் அவரவர் வீடுகளுக்கு செல்ல அவகாசமும் வழங்கப்பட்டது. இதன் காரணமாக நேற்று முதல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் தெலங்கானாவில் பஸ்கள் இயங்கின. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை சற்று திரும்பியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT