Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM

பிரதமர் நரேந்திர மோடியுடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு :

பிரதமர் நரேந்திர மோடியை மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார்.

மகாராஷ்டிராவில் மராத்தா பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16% இடஒதுக்கீடு வழங்கி 2018-ம் ஆண்டு அப்போது ஆட்சியில் இருந்த பாஜக அரசு சட்டம் நிறைவேற்றியது. அந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்து.

இந்நிலையில் அவர்களுக்கு பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு வழங்கப்படும் 10% இடஒதுக்கீட்டின் பலன் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. மராத்தா சமுதாயத் தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்தஉள்ளதாக மராத்தா அமைப்புகளும், பாஜகவும் அறிவித்தன.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை உத்தவ் தாக்கரே டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார். மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீட்டை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து மோடியுடன் உத்தவ் தாக்கரே ஆலோசித்தார்.

பின்னர், உத்தவ் தாக்கரே கூறுகையில், ‘‘பிரதமருடனான சந்திப்பு சுமூகமாக இருந்தது. மராத்தா இடஒதுக்கீடு, ஜிஎஸ்டி நிலுவைத் தொகை உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்தோம்’’ என்றார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x