Published : 08 Jun 2021 03:12 AM
Last Updated : 08 Jun 2021 03:12 AM
புதுடெல்லி: மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி மிகக் குறைந்த எண்ணிக்கையாக 96,982 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். தற்போது 61 நாட்களுக்கு பிறகு கடந்த 24 மணி நேரத்தில் மிக குறைவாக ஒரு லட்சத்து 636 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 2,427 ஆக பதிவாகி உள்ளது.
இந்தியாவில் மொத்தம் 2 கோடியே 89 லட்சத்து 9,975 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த உயிரிழப்பு 3 லட்சத்து 49,186 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 399 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். இதுபோல் குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து 25 நாட்களாக அதிகரித்து வருகிறது. நாட்டில் மொத்தமாக குணமடைந்தோரின் எண்ணிக்கையும் 2 கோடியே 71 லட்சத்து 59,180 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோரின் சதவீதம் 93.94 ஆக உள்ளது. தற்போது நாட்டில் கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 14 லட்சத்து 1,609 ஆக உள்ளது. தினமும் வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 10 சதவீதத்துக்கு கீழாக உள்ளது. நேற்றைய நிலவரப்படி 6.34 சதவீதமாக உள்ளது. இவ்வாறு மத்திய சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT