Published : 06 Jun 2021 03:11 AM
Last Updated : 06 Jun 2021 03:11 AM
புதுடெல்லி: நடப்பு ராபி பருவத்தில் நாடு முழுவதும் விளைந்த கோதுமையை மத்திய அரசு கொள்முதல் செய்தது. அண்மையில் கொள்முதல் செய்த கோதுமைக்காக விவசாயிகளுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் தொகை நேரடியாக மத்திய அரசு சார்பில் செலுத்தப்பட்டுள்ளது.
பஞ்சாப் விவசாயிகளுக்கு ரூ.26 ஆயிரம் கோடி, ஹரியாணா விவசாயிகளுக்கு ரூ.16,700 கோடி நேரடியாக வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை நாட்டிலுள்ள மற்ற கோதுமை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ராபி பருவத்தில் 44.4 லட்சம் விசாயிகளிடமிருந்து கோதுமை கொள்முதல் செய்யப்பட்ட வகையில் மத்திய அரசு ரூ.81,200 கோடியை வழங்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT