Published : 03 May 2021 03:15 AM
Last Updated : 03 May 2021 03:15 AM
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் கட்சி முன்னிலை பெற்றதும் நேற்று மாலை பாஜக அலுவலகங்கள் முன்பு திரிணமூல் காங்கிரஸார் திரண்டு கோஷமிட்டனர். தலைநகர் கொல்கத்தாவில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் முன்பு ஆரவாரம் செய்தனர்.
ஹூக்ளி மாவட்டம், ஆரம்பாக் நகரில் அமைந்துள்ள பாஜக அலுவலகத்தை மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர். இதில் பாஜக அலுவலகம் முழுமையாக எரிந்து சாம்பலானது. இதற்கு மாநில பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாஜக அலுவலக எரிப்புக்கும் திரிணமூல் காங்கிரஸுக்கும் தொடர்பும் இல்லை என்று அந்த கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT