

இந்தியாவில் கரோனா தொற்றால் ஒரே நாளில் புதிதாக 3.49 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 2,767 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் ஒரே நாளில் 3 லட்சத்து 49 ஆயிரத்து 691பேர் கரோனா வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் நாட்டில் கரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை ஒருகோடியே 69 லட்சத்து 60 ஆயிரத்து 172 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 82 ஆயிரத்து 751 ஆக அதிகரித்துள்ளது. கடந்த24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,767 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் கரோனாவுக்குஉயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 311 ஆக அதிகரித்துள்ளது.
26 லட்சம்
இவ்வாறு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி நிலவரப்படி கரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 20 லட்சமாக இருந்தது. அதன்பின் படிப்படியாக உயர்ந்து டிசம்பர் 19-ம் தேதி ஒரு கோடியை தாண்டியது. கடந்த ஏப்ரல் 19-ம் தேதி 1.5 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதுவரை 27 கோடியே 79 லட்சத்து 18 ஆயிரத்து 810 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.