Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM

மேற்கு வங்கத்தில் 4-ம் கட்ட தேர்தல் : அரசியல் தலைவர்கள் பிரச்சாரம் முடிந்தது :

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் கடந்த மார்ச் 27-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 29 வரை 8 கட்டங்களாக நடந்து வருகிறது. இதுவரை 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 294 தொகுதிகளில் இதுவரை 91 தொகுதிகளில் வாக்குப் பதிவு முடிந்துள்ளது.

4-ம் கட்டமாக 5 மாவட்டங்களில் உள்ள 44 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 373 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

4-ம் கட்ட தேர்தலை சந்திக்கும் தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய நேற்றுதான் கடைசி நாளாகும். எனவே பல்வேறு கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

பாஜக சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி.நட்டா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், நடிகர் மிதுன் சக்கரவர்த்தி உள்ளிட்டோரும் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோரும் மற்றும் பிற கட்சிகளின் மூத்த தலைவர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இந்நிலையில் 4-ம் கட்ட தேர்தலை சந்திக்கும் 44 தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை முடிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x