Published : 08 Apr 2021 03:12 AM
Last Updated : 08 Apr 2021 03:12 AM
பஞ்சாப் மாநில முதல்வர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பஞ்சாபில் 12 மாவட்டங்களில் இரவு 9 முதல் காலை 5 அமலில் இருந்த ஊரடங்கு மாநிலம் முழுவதும் நீட்டிக்கப் படுகிறது. அரசியல், சமூக, கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு முழு தடை விதிக்கப்படுகிறது. இதனைமீறுவோர் அரசியல் தலைவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது தொற்று நோய் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.
திருமணங்கள் மற்றும் இறுதி சடங்குகளில் உள்ளரங்கு எனில் 50 பேர், திறந்தவெளி என்றால் 100 மட்டுமே பங்கேற்க முடியும். கல்வி நிறுவனங்கள் ஏப்ரல் 30 வரை மூடப்பட்டிருக்கும். இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT