Published : 07 Apr 2021 03:15 AM
Last Updated : 07 Apr 2021 03:15 AM

தெலங்கானா மாநில : தலைமை செயலருக்கு கரோனா தொற்று :

ஆந்திர மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 1,941 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,10,943 ஆக உயர்ந்தது. 11,809 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 7 பேர் உயிரிழந்தனர்.

தெலங்கானா மாநிலத்திலும் நேற்று ஒரே நாளில் 1,498 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,729 ஆக உயர்ந்தது. தலைமை செயலாளர் சோமேஷ் குமாருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x