Published : 07 Apr 2021 03:15 AM
Last Updated : 07 Apr 2021 03:15 AM

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த - டெல்லியில் இரவு நேர ஊரடங்கு :

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த டெல்லியில் இரவுநேர ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் நாள்தோறும் 3,500 பேர் முதல் 4,000 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. டெல்லியை பொறுத்தவரை இது 4-வது கரோனா வைரஸ் அலை என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி நேற்றிரவு முதல் டெல்லி முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமல் செய்யப் பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள், போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படவில்லை.

டெல்லி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இரவிலும் பயணி கள் போக்குவரத்து சேவை செயல் படலாம். இதேபோல வெளிமாநில பயணிகள் போக்குவரத்துக்கும் சரக்குப் போக்குவரத்துக்கும் எவ்வித கட்டுப்பாடும் கிடையாது.

இரவில் அரசுப் பணியை மேற்கொள்ளும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் அடையாள அட்டையுடன் பயணம் செய்ய லாம். சுகாதார ஊழியர்களுக்கு இரவு ஊரடங்கில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. விமான நிலையம், ரயில் நிலையம் இரவு நேரத்தில் வழக்கம்போல செயல்படும்.

இரவில் கரோனா தடுப் பூசி போட்டுக் கொள்ள இ-பாஸ் பெற்றுச் செல்லலாம். நோயாளி கள், கர்ப்பிணிகளுக்கு இரவுஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஏடிஎம் மையங்கள் இரவிலும் திறந்திருக்கும். இதேபோல மருந்தகங்கள், மளிகை கடைகள், பால் விற்பனையகம் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் இரவில் செயல்படலாம். அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கு நேரடியாக சென்று விநியோகிக்கும் சேவையை இர வில் தடையின்றி தொடரலாம்என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x