Published : 07 Apr 2021 03:15 AM
Last Updated : 07 Apr 2021 03:15 AM

புதுச்சேரி, கேரளாவிலும் அமைதியாக முடிந்தது தேர்தல் : அசாமில் 82, மேற்கு வங்கத்தில் 78 சதவீத வாக்குகள் பதிவானது

திருவனந்தபுரம்

புதுச்சேரி, கேரள சட்டப்பேரவைதேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. புதுச்சேரியில் 81.84 சதவீதம், கேரளாவில் 74 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

கேரளாவில் சபரிமலை விவகாரம்

கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் மார்க்சிஸ்ட் அரசின் செயல்பாடுகளை காங்கிரஸ் கூட்டணியும் பாஜக கூட்டணியும் கடுமையாக விமர்சித்து வருகின்றன. வாக்குப்பதிவு நாளான நேற்றும் சபரிமலை ஐயப்பன் கோயில் குறித்து பிரதான கட்சிகளின் தலைவர்கள் காரசாரமான கருத்துகளை முன்வைத்தனர்.

எனினும் கேரள முதல்வர் பினராயி விஜயன், பினராயி நகரில் நேற்று வாக்களித்த பின் கூறும்போது, "ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசு, மக்களை மிக நன்றாக கவனித்துக் கொண்டது. எனவே ஐயப்பன் சுவாமி உட்பட அனைத்து கடவுள்களின் ஆசியும் எங்களுக்கு இருக்கிறது. நாங்கள் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x