Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM
லக்னோ: உத்தரப் பிரதேசத்தை சுயசார்பு மாநிலமாக உருவாக்கும் இலக்குடன் 2021-22 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளது யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு.
உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வர உள்ளதால் பட்ஜெட் திட்டங்கள் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. அதேபோல் இந்த பட்ஜெட்டில் ரூ.27,598.40 கோடி அளவில் புதிதாக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பட்ஜெட்டை அம்மாநில நிதி அமைச்சர் சுரேஷ் குமார் கண்ணா தாக்கல் செய்தார். கணினி மூலமாகத் தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட்டின் மதிப்பு ரூ.5,50,270.78 கோடி ஆகும். இது முந்தைய ஆண்டு பட்ஜெட்டைக் காட்டிலும் ரூ.37,410 கோடி அதிகம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநிலத்தின் அனைத்து துறைகளின் வளர்ச்சியையும் உறுதி செய்யும் வகையில் பட்ஜெட் திட்டமிடப்பட்டிருப்பதாகவும், உத்தரப் பிரதேச மாநிலத்தை சுயசார்பு மாநிலமாக உருவாக்கும் வகையிலான பட்ஜெட் என்றும் நிதி அமைச்சர் கூறியுள்ளார். சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் வரலாற்றில் முதன்முறையாக கணினி மூலமாகத் தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆதித்யநாத் அரசு தாக்கல் செய்த இந்த பட்ஜெட் முதல் கணினி பட்ஜெட்டாக உள்ளது. மேலும் இது யோகி ஆதித்யநாத்தின் நடப்பு ஐந்தாண்டு ஆட்சியின் கடைசி பட்ஜெட்டாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT