Published : 29 Jan 2021 03:13 AM
Last Updated : 29 Jan 2021 03:13 AM
திருப்பதி: ஆந்திர தேர்தல் ஆணையத்துக்கும் மாநில அரசுக்கும் இடையே கடும் பனிப்போர் நிலவி வருகிறது. இந்நிலையில் பஞ்சாயத்து தேர்தல் தேதியை தேர்தல் ஆணையர் ரமேஷ் குமார் அறிவித்தார். ஆனால், தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அரசு ஊழியர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னரே தேர்தலை நடத்த வேண்டுமென மாநில அரசு போர்க்கொடி தூக்கியது. தேர்தலுக்கு தடை கோரி ஆந்திர அரசு மற்றும் ஊழியர் சங்கத்தினர் விஜயவாடா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்த அனுமதி வழங்கியது. ஆந்திர அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. உச்ச நீதிமன்றமும் தேர்தலை நடத்த வேண்டுமென உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து வரும் பிப்ரவரி மாதம் 4 கட்டங்களாக பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில், பஞ்சாயத்து துறை அமைச்சர் பெத்தி ரெட்டி ராமசந்திரா ரெட்டி திருப்பதியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, "அதிகார பலத்தால் தேர்தல் ஆணையர் ரமேஷ் குமார் என்னை மிரட்டுகிறார். பஞ்சாயத்து தேர்தலில் பல கிராமங்களில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டு மட்டும் எதற்காக தேர்தல் இன்றி வேட்பாளர் வெற்றி பெறக் கூடாது என தேர்தல் ஆணையம் கூறுகிறது. இதை ஏறக் முடியாது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT