Published : 14 Jan 2021 03:19 AM
Last Updated : 14 Jan 2021 03:19 AM
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் மூன்றாம் பாலினத்தவருக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ள இந்தப் பணி குறித்து அம்மாநில சமூக நீதித்துறை இணை இயக்குநர் ஆர்.பி. சிங் கூறியதாவது:
நாட்டிலேயே முதல் மாவட்டமாக போபாலில் மூன்றாம் பாலினத்தவருக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இது அவர்களுக்கு தனித்துவமான அங்கீகாரமாக இருக்கும். மூன்றாம் பாலினத்தவர்களுக்கானஅரசின் நலத்திட்டங்களின் பலனை பெறவும் உதவும். போபாலில் வசிக்கும் மூன்றாம் பாலினத்தவர் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT