Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

கரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 25 மாநிலங்களில் 5,000-க்கு கீழ் குறைந்தது

புதுடெல்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 12,584 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 7 மாதங்களில் இது மிகவும் குறைவு. இதையும் சேர்த்து 1 கோடியே 4 லட்சத்து 79 ஆயிரத்து 179 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் 25 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5,000-க்கும் கீழ் குறைந்துள்ளது. காலை 8 மணி நிலவரப்படி பல்வேறு மாநிலங்களில் 167 பேர் இறந்துள்ளனர். இதில் மகாராஷ்டிராவில் 40 பேரும் கேரளாவில் 20 பேரும், மேற்குவங்கத்தில் 16 பேரும் இறந்துள்ளனர். இதைத் தொடர்ந்து கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,51, 327 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 1 லட்சத்து 11 ஆயிரத்து 294 ஆக அதிகரித்துள்ளது. இதனால், தேசிய அளவில் குணமடைந்தவர்கள் சதவீதம் 96.4 ஆக உயர்ந்துள்ளது. கரோனா இறப்பு விகிதம் 1.44 சதவீதமாக உள்ளது. பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களில் உருமாறிய புதிய வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 96 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக யாருக்கும் உருமாறிய கரோனா தொற்று கண்டறியப்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x