Published : 22 Nov 2020 03:14 AM
Last Updated : 22 Nov 2020 03:14 AM

கரோனா பரிசோதனை 13 கோடியை தாண்டியது

கடந்த ஏப்ரல் தொடக்கத்தில் நாட்டில் 10,000 கரோனா பரிசோதனைகள் மட்டுமே நடத்தப்பட்டிருந்தன. பரிசோதனைகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டன. தற்போது நாளொன்றுக்கு 10 லட்சம் முதல் 15 லட்சம் கரோனா பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.

மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில், "நாட்டில் இதுவரை நடத்தப்பட்ட கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 13,06,57,808 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் ஒரு கோடி பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நேற்று 46,232 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதுவரை 90,50,597 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 84,78,124 பேர் குணமடைந்துள்ளனர்.

நேற்று மட்டும் 49,715 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மருத்துவமனைகளில் 4,39,747 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 564 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,32,726 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் புதிதாக 5,640 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் தற்போது 79,268 பேர் சிகிச்சையில் உள்ளனர். கர்நாடகாவில் புதிதாக 1,781 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 24,771 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆந்திராவில் புதிதாக 1,221 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அங்கு கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 15,382 ஆக குறைந்திருக்கிறது.

கேரளாவில் நேற்று 5,772 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் 66,856 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உத்தர பிரதேசத்தில் 2,840 பேர், டெல்லியில் 6,608 பேர், மேற்குவங்கத்தில் 3,626 பேர், ஒடிசாவில் 757 பேர், தெலங்கானாவில் 925 பேர், ராஜஸ்தானில் 2,762 பேர், பிஹாரில் 375 பேர், சத்தீஸ்கரில் 1,842 பேர், ஹரியாணாவில் 3,104 பேர், அசாமில் 164 பேர், குஜராத்தில் 1,420 பேர், மத்திய பிரதேசத்தில் 1,528 பேர், பஞ்சாபில் 818 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x