Published : 21 Nov 2020 03:15 AM
Last Updated : 21 Nov 2020 03:15 AM

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு நிலவும்இக்கட்டான சூழலில் பூடானுக்கு இந்தியா உதவும் 2-ம் கட்ட ரூபே கார்டை அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி

கரோனா வைரஸ் பாதிப்பு நிலவும் இக்கட்டான சூழலில் பூடானுக்கு இந்தியா உதவும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியும் பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங்கும் இணைந்து 2-ம் கட்ட ரூபேஅட்டையை காணொலி மூலம் நேற்று அறிமுகம் செய்தனர். இதன்மூலம் பூடானைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் உள்ள ரூபே வலையமைப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்கள் இங்குள்ள எடிஎம்களில் பணம் எடுத்துக் கொள்வதுடன், கடைகளில் பொருட்களை வாங்க இந்த ரூபேகார்டை பயன்படுத்தி பணம் செலுத்தலாம் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, “பல்வேறுதுறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன. குறிப்பாக பூடான் செயற்கைக் கோள்களை விண்ணில் நிலை நிறுத்த இஸ்ரோ தயாராகி வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பு நிலவும் இக்கட்டான சூழலில் பூடானுக்கு இந்தியா உதவியாக இருக்கும். பக்கத்து நாட்டின் தேவையை பூர்த்தி செய்வதற்கு எப்போதுமே இந்தியா முன்னுரிமை அளிக்கும்” என்றார்.

ரூபே அட்டை என்பது இந்திய அரசின் டெபிட், கிரெடிட் கார்டு பணப் பரிவர்த்தனை இணைய வசதியாகும். முதல் கட்ட ரூபேஅட்டையை இரு நாட்டு பிரதமர்களும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்தனர். இதன்மூலம் ரூபே அட்டை வைத்துள்ள இந்தியர்கள் பூடானில் உள்ள ஏடிஎம்கள் மற்றும் விற்பனை முனையங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x