Published : 24 Oct 2021 03:06 AM
Last Updated : 24 Oct 2021 03:06 AM

3 நாள் பயணமாக காஷ்மீர் வந்தார் அமித் ஷா : தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி மனைவிக்கு அரசுப் பணி

புதுடெல்லி

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 3 நாள் பயணமாக நேற்று காஷ்மீர் வந்தார். தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற போலீஸ் அதிகாரியின் மனை வியை நேரில் சந்தித்து அரசு பணிக்கான ஆணையை வழங்கினார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன், காஷ்மீரை 2 ஆகப் பிரித்து லடாக் தனி யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்டது. அதன்பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முதல் முறையாக காஷ்மீர் சென்றார்.

3 நாள் பயணமாக நேற்று காலை நகர் விமான நிலையம் சென்றடைந்த அமைச்சர் அமித் ஷாவை, காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், டிஜிபி தில்பக் சிங் மற்றும் உயரதிகாரிகள் வரவேற்றனர். விமான நிலையத்தில் இருந்து நகரின் புறநகரான நவ்காம் பகுதிக்குச் சென்றார். அங்கு தீவிரவாதிகளால் கடந்த ஜூன் 22-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் பர்வேஸ் அகமதுவின் மனைவி பாத்திமா அக்தர் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், கருணை அடிப்படையில் பர்வேஸ் அகமதுவின் மனைவிக்கு அரசு பணிக்கான நியமன ஆணையையும் அமித் ஷா வழங்கினார்.

அதன்பிறகு நகரில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து விரிவான ஆய்வு நடத்தினார். மாலை 4.45 மணிக்கு காஷ்மீர் இளைஞர் கிளப் உறுப்பினர்களைச் சந்தித்து அமித் ஷா உரையாடினார். அதன்பிறகு மாலை 6 மணிக்கு நகரில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா நகருக்கு நேரடி சர்வதேச விமான சேவையை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.

அமித் ஷாவின் வரு கையை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x