Published : 10 Oct 2021 03:15 AM
Last Updated : 10 Oct 2021 03:15 AM
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்கு நர் நா.புவியரசன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக 10-ம் தேதி (இன்று) நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், மற்ற மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும் பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
11-ம் தேதி (நாளை) நீலகிரி, கோவை, சேலம், திருவண்ணா மலை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி,
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திரு வாரூர், நாகப்பட்டினம், மயிலாடு துறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், மற்ற மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை யும் பெய்யக்கூடும். 12 மற்றும் 13-ம் தேதிகளில் மேற்கண்ட பகுதிகள் உட்பட பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 10-ம் தேதி (இன்று) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் தாக்கத்தால், 10, 11-ம் தேதிகளில் தெற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 45 - 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT