Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM

வெப்பச் சலனம் காரணமாக இன்று முதல் தமிழகம், புதுச்சேரியில் - 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 4 நாட்களுக்கு இடி, மின் னலுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், அதை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று (9-ம் தேதி) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் 10 முதல் 12-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை 82 டிகிரி முதல் 97 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக சென்னை நந்தனத்தில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னை விமான நிலையம், அண்ணா பல்கலைக்கழகம், பூந்தமல்லி, மேற்கு தாம்பரம், ராணிப்பேட்டை மாவட்டம் கலவை யில் 5 செ.மீ., பெரும்புதூர், வேலூர் மாவட்டம் அம்முண்டியில் 4 செ.மீ., திருவாலங்காடு, சோளிங்கர், வேலூரில் 3 செ.மீ., கோத்தகிரி, கொரட்டூரில் 2 செ.மீ., நுங்கம்பாக்கம், விருதுநகரில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

இன்று மத்திய வங்கக்கடல் பகுதிகளிலும், 9, 10-ம் தேதிகளில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், இன்று முதல் 12-ம் தேதி வரை மன்னார் வளைகுடா பகுதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

இன்று முதல் 12-ம் தேதி வரை தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளிலும், நாளை முதல் 12-ம் தேதி வரை கேரள, கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளிலும் 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும்.

நாளை மத்திய வங்கக்கடல் பகுதிகளிலும், 11, 12-ம் தேதி களில் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதி மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளிலும் 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x