Published : 08 Jun 2021 03:12 AM
Last Updated : 08 Jun 2021 03:12 AM
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பெண்கள் உட்பட 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட் டம் பிராங்குட் பகுதி அருகே உராவடே கிராமத்தில் உள்ள தொழிற்பேட்டை யில் எஸ்விஎஸ் அக்குவா டெக்னா லஜீஸ் என்ற தொழிற்சாலை அமைந் துள்ளது. இங்கு தண்ணீரை சுத்தி கரிப்பு செய்ய உதவும் ரசாயனப் பொருட்கள், கருவிகள் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடு களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்த தொழிற்சாலையில் நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலை யில் உள்ள ஒரு கருவி வெடித்ததில் தீப்பிடித்து, மற்ற பகுதிகளுக்கு பரவிய தாக தெரிகிறது. தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஊழி யர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர்.
விபத்து குறித்து தகவல் கிடைத் ததும் தீயணைப்புப் படையினரும், போலீஸாரும் விரைந்து வந்தனர். 8 தீயணைப்பு வண்டிகளில் வந்த வீரர்கள் 3 மணி நேரத்துக்கும் மேல் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் தொழிற்சாலையில் பணிபுரிந்த 15 பெண்கள் உட்பட 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் முல்ஷி தாலுகா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆலையில் இருந்து 18 உடல்கள் கண்டெடுக்கப்பட்டு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டன என்று புனே பெருநகர மண்டல வளர்ச்சி ஆணையத்தின் (பிஎம்ஆர்டிஏ) தீய ணைப்புப் பிரிவு தலைவர் தேவேந்திர போட்ப்ஹோடே தெரிவித்தார்.
இந்த விபத்தில் மேலும் சிலர் சிக்கிக் கொண்டிருப்பதாக தெரிகிறது. அவர் களை மீட்கும் பணியில் போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் ஈடுபட் டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பலரை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற் பட்டுள்ளதாக பிஎம்ஆர்டிஏ தலைமைச் செயல் அதிகாரி சுஹாஸ் திவாசே தெரிவித்தார். தொழிற்சாலையில் நடந்த தீ விபத்தில் 18 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT