Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமி ழிசையை என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். என்.ஆர் காங்., பாஜக எம்எல்ஏக்கள் 16 பேரின் ஆதரவு கடிதத்தையும் வழங்கினார்.
புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத்தேர் தலில் பதிவான வாக்குகள் நேற்று முன் தினம் எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 30 இடங்களில், ஆட்சி அமைப்பதற்கு 16 இடங்கள் தேவை. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்ற என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இக்கூட்டணியில் இடம் பெற்ற அதிமுக, போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் 2 இடங்களிலும், திமுக 6 இடங் களிலும் வெற்றி பெற்றுள்ளன. இவர் களைத் தவிர 6 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
புதுச்சேரி மாநில பாஜக பொறுப்பாளர் கள் நிர்மல்குமார் சுரானா, ராஜீவ் சந்திர சேகர் எம்.பி. ஆகியோர் என்.ஆர்.காங் கிரஸ் தலைவர் ரங்கசாமியை அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து கூறினர். பின் னர், புதுச்சேரியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ரங்கசாமியுடன் ஆலோசனை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, என்.ஆர்.காங் கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம், புதுச்சேரி அப்பா பைத்தியசாமி கோயிலில் நடந்தது. இதில் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவ ராக ரங்கசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் முன்னிலையில் நடந்த பாஜக எம்எல்ஏக்கள், மாநில நிர்வாகிகள் ஆலோ சனைக் கூட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க உறுதி செய்து, அதன்பேரில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதென முடிவு செய்தனர்.
இந்நிலையில், துணை நிலை ஆளு நர் தமிழிசை சவுந்தரராஜனை ரங்கசாமி நேற்று மாலை சந்தித்து, 16 எம்எல்ஏக் களின் ஆதரவு கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இதுபற்றி ஆளுநர் தமிழிசை கூறும் போது, ‘‘நல்ல நேரம் பார்த்து தெரிவிப்ப தாக ரங்கசாமி கூறினார். அவர்கள் சொல் லும் தேதியில் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படும்’’ என்றார்.
ரங்கசாமி கூறும்போது, ‘‘முதல்வராக என்னை தேர்வு செய்ததற்கு நன்றி தெரி விக்கிறேன். பதவி ஏற்பு விழா நல்ல நாளில், நல்ல நேரத்தில் நடக்கும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT