Published : 27 Apr 2021 06:29 AM
Last Updated : 27 Apr 2021 06:29 AM
மாநில அரசுகள் கடும் நிதிச் சுமையை சந்தித்து வரும் சூழலில், கரோனா தடுப்பூசியின் மாறுபட்ட விலை முறையானது முற்றிலும் நியாயமற்றது என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து பிரதமருக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறி யிருப்பதாவது:
நாடு முழுவதும் 3-ம் கட்ட கரோனா தடுப்பூசி போடுவது தொடர்பான புதிய கொள்கையை சமீபத்தில் மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. அந்த கொள்கையில் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு செலுத்துவதற்கான தடுப்பூசிகளை கொள்முதல் செய்வது மற்றும் தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்து வது ஆகியவை மாநில அரசுகளின் பொறுப்பு என்று கூறப் பட்டுள்ளது.
இந்த தடுப்பூசிகள், உற்பத்தி யாளர்கள் முன்கூட்டியே நிர் ணயித்த விலையில்தான் மாநில அரசுகளால் வாங்கப்படுகின்றன. இந்த விலையானது மத்திய அர சால் தடுப்பூசி விநியோகத்துக்கு வழங்கப்பட்டுள்ள விலையில் இருந்து மாறுபட்டதாக உள்ளது.
சில தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மாநில அரசுகளுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்துள்ளன. மாநில அரசுகள் கடும் நிதிச்சுமையை சந்தித்து வரும் சூழலில், இந்த மாறுபட்ட விலை முறையானது முற்றிலும் நியாயமற்றதாகும். மத்திய அரசைவிட மாநில அரசுகளின் நிதி ஆதாரம் குறைவாக உள்ள நிலையில் இது அநீதியானதாகும்.
கரோனா தடுப்பூசி திட்டத் துக்கு 2021-22 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ரூ.35 ஆயி ரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், 3-ம் கட்ட தடுப்பூசி திட்டத்துக்கு தேவை யான தடுப்பூசிகளை மத்திய அரசே வழங்கும் என்பது மாநில அரசுகளின் நியாயமான எதிர்பார்ப்பாகும்.
எனவே, 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு தேவையான அனைத்து தடுப்பூசிகளையும் மத்திய அரசே கொள்முதல் செய்து விநியோகிக்க வேண்டும். மேலும், வரும் வாரங்களில் நாடு முழுவதும் அனைத்து பகுதி களுக்கும் தடுப்பூசி வழங்குவதை உறுதி செய்ய இறக்குமதி உள்ளிட்ட இதர வழிகளை கண் டறிய வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள் கிறேன். இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT