Published : 20 Apr 2021 03:13 AM
Last Updated : 20 Apr 2021 03:13 AM

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மே 1 முதல் கரோனா தடுப்பூசி : மத்திய அரசு அனுமதி

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகை யில் நாடு முழுவதும் மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மருந்துக் கடைகளில் தடுப்பூசி மருந்தை விற்பனை செய்யவும் மத்திய அரசு அனுமதித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா 2-வது அலை பரவல் தீவிரமாக அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே 45 வயதுக்கு மேற் பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வரு கிறது. இந்நிலையில், மூத்தஅதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள், மருந்து உற்பத்தி நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி நேற்று தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைகளுக்கு பிறகு, நாடு முழுவதும் மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனை வருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தப்படுவதின் 3-வது கட் டத்தை பரவலாக்கவும் விரைவுபடுத்தும் வகையிலும் மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தடுப்பூசி உற்பத்தியாளர்கள் உற்பத்தி யில் 50 சதவீதத்தை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும். மீதியுள்ள 50 சத வீதத்தை மாநில அரசுகளுக்கும் பொதுச் சந்தை விற்பனைக்கும் அளிக்கலாம். உற்பத்தியாளர்கள் மருந்தின் விலையை முன்னதாகவே தெரிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில் மாநில அரசுகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்கள் உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கிக் கொள்ளலாம். மத்திய அரசு தனது பங்கில் இருந்து மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங் களுக்கும் கரோனா பாதிப்பின் அளவை பொறுத்து தடுப்பூசி மருந்துகளை ஒதுக் கீடு செய்யும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

தடுப்பூசி மருந்துகளை பொதுச் சந்தையில் விற்கலாம் என்று உற்பத்தி யாளர்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் மருந்துக் கடைகளிலும் தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, மருத்துவ நிபுணர்கள், மருந்து உற்பத்தி நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் காணொலிக் காட்சி மூலம் பேசிய பிரதமர் மோடி, ‘‘கரோனா தொற்றின் இரண்டாம் அலையை நாடு சந்திக்கிறது. நமது மருத்துவர்களும், முன்களப் பணியாளர்களும் கரோனா தொற்றுக்கு எதிராக முழு ஆற்றலுடன் போராடி லட்சக்கணக்கான மக்களின் உயிரை காப்பாற்றி வருகின்றனர். தடுப்பூசி மருந்து உற்பத்தியை அதி கரிக்க வேண்டும். கரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசி மிகப்பெரிய ஆயுத மாகும். மக்களை தடுப்பூசி போட்டுக் கொள்ள மருத்துவர்கள் ஊக்கப்படுத்த வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x