Published : 22 Nov 2020 03:14 AM
Last Updated : 22 Nov 2020 03:14 AM

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்வி, விடுதி கட்டணத்தை அரசே செலுத்தும் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர் களுக்கான கல்வி, விடுதிக் கட் டணத்தை தமிழக அரசே செலுத்தும் என முதல்வர் பழனிசாமி அறிவித் துள்ளார்.

முதல்வர் பழனிசாமி நேற்று வெளி யிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டுக்கான வரலாற்று சிறப்புமிக்க ஒரு சட்டத்தை தமிழக அரசு இயற்றியது. அதன்படி, இந்த ஆண்டே மொத்தம் 313 இளநிலை மருத்துவ இடங்களிலும், 92 பல் மருத்துவ இடங்களிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடந்து, மாணவர்களுக்கு ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அரசுப் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், வனத் துறை பள்ளிகளில் பயிலும் மாண வர்களின் ஏழ்மை நிலை, குடும்ப பொரு ளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு கல்விக் கட்டணம் மற்றும் இதர செலவினங் களால் சுமை ஏதும் ஏற்படா வண்ணம், இந்த செலவினங்களை வழங்கு வதற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை, இதர கல்வி உதவித் தொகை திட்டங்கள் மூலம் நடைமுறைப்படுத்த உரிய உத்தரவை பிறப்பித்துள்ளேன் என்று கடந்த 18-ம் தேதி 7.5 சதவீத இட ஒதுக் கீடு அடிப்படையில் எம்பிபிஎஸ் படிப்புக்கான சேர்க்கை ஆணை வழங்கும் விழாவில் அறிவித்தேன்.

கலந்தாய்வில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கப் பெற்றுள்ள மாணவர்கள், கல்விக் கட்டணத்தை செலுத்துவதில் உள்ள சிரமத்தை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே இதை அறிவித்தேன்.

சுழல் நிதி

அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர ஒதுக்கீட்டு ஆணை பெற் றுள்ள அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை செலுத்த, உதவித்தொகை அனுமதி வரும் வரை காத்திருக்காமல், உடனடி யாக செலுத்தும் விதமாக, தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தில் ஒரு சுழல் நிதியை உருவாக்க உத்தர விட்டுள்ளேன். அந்நிதியில் இருந்து மாணவர்களுக்கான கல்வி, விடுதிக் கட்டணங்கள் போன்றவற்றை தமிழக அரசே நேரடியாக கல்லூரி நிர்வா கத்துக்கு செலுத்தும்.

அரசுப் பள்ளிகளில் பயின்ற ஏழை, எளிய மாணவர்களுக்கு சம வாய்ப்பு அளித்து அவர்களின் மருத்துவர் கனவை நனவாக்கி, சமநீதியை நிலை நாட்டி, சாதனை படைத்த தமிழக அரசு, அந்த மாணவர்களின் கல்வி மற்றும் விடுதி செலவுகளையும் ஏற்று, அவர்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை அனை வரும் அறிவர்.

இவர்களுக்கு அரசின் உதவி முழுமையாக கிடைக்கும் என தெரிந்த பின்பும், திமுக உதவுவதாக தெரிவித்திருப்பது ஒரு அரசியல் நாடகமே என்பதை மக்கள் நன்கு அறிவர்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் அறிக்கை

முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும், சமூகநீதிக் கொள்கை யின் அடிப்படையையும் வெளிப்படுத் தும் வகையில் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு சட்டப்பேரவையில் நிறை வேற்றின. அதை மத்திய அரசிடம் உரிய வகையில் வலியுறுத்திச் செயல் படுத்தும் வலிமையமற்ற அதிமுக அரசால் அரியலூர் அனிதா தொடங்கி ஆண்டுதோறும் பல மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைமை ஏற்படுகிறது.

நீட் தேர்வால் ஒட்டுமொத்த தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவு சிதறடிக்கப்பட்ட நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக் கீட்டை அதிமுக அரசு அறிவித்தது. அதிலும்கூட, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு பரிந்துரைத்த 10 சதவீத உள் ஒதுக்கீட்டை நடை முறைப்படுத்தாமல் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினர். அந்த மசோதாவுக்கும் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலதாமதம் செய்ததால் திமுக போராட்டம் நடத்தியது. இந்த போராட் டத்தாலும், உயர் நீதிமன்றத்தின் கண்டிப்பாலும் தற்போது அது செயல் வடிவம் பெற்றுள்ளது.

பரிதவிப்பு

நீட் தேர்வில் மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின்படி, அரசு மருத்துவக் கல்லூரிகளில் 227 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதமு ள்ள இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்குரிய கட்டணத்தை அரசுப் பள்ளி களில் பயின்ற ஏழை மாணவர்கள் செலுத்த முடியாத நிலை இருப்ப தால், அவர்கள் பரிதவிப்புக்கு ஆளாகி யுள்ளனர். மாணவர்களும் பெற்றோ ரும் அதிமுக அரசை நம்பியிருந்த நிலையில், மருத்துவக் கனவு மீண்டும் சிதைக்கப்பட்டு விடுமோ என்ற மனப் பதற்றத்துக்கும் அச்சத்துக்கும் ஆளாகி இருக்கின்றனர்.

அவர்களின் துயர் துடைக்க வேண் டியது ஆட்சியாளர்களின் கடமை யாகும் என்பதை நினைவூட்டுகிறேன். அதே நேரத்தில், மாணவர்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண் டுள்ள திமுக, இந்த கல்வியாண்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்புக்குரிய கட்டணத்தை முழுமை யாக ஏற்கும்.

சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு அமையவிருக்கிற திமுக ஆட்சியில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வதற்குரிய சட்ட நடவடிக்கைகள் உறுதியாக மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x