தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளைடிசம்பருக்கு பிறகு திறக்கலாம் உயர் நீதிமன்றம் கருத்து

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளைடிசம்பருக்கு பிறகு திறக்கலாம்  உயர் நீதிமன்றம் கருத்து
Updated on
1 min read

தமிழகத்தில் டிசம்பர் மாதத்துக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகளை திறக்கலாம் என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தேனியைச் சேர்ந்த ராம்பிரசாத் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு வில் கூறியிருந்ததாவது:

கரோனா வைரஸுக்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வில்லை. இந்நிலையில், நவ.16 முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்க லாம் என தமிழக அரசு அறிவித் துள்ளது. பள்ளி, கல்லூரிகள் திறக் கப்பட்டால் மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வாய்ப்பில்லை. போக்குவரத்து முழுமையாக இயங்கவில்லை. இந்நிலையில், வேறு மாவட்டங் களில் உள்ள கல்வி நிறுவனங் களுக்கு மாணவர்கள் செல்வதில் சிரமம் ஏற்படும்.

மேலும், பல கல்வி நிறுவனங் கள் கரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தும் மையங்களாக செயல்பட்டன. அந்தக் கல்வி நிறுவனங்கள் முழுமையாக தூய்மைப்படுத்தப்படாமல் திறக் கப்பட்டால், கரோனா பரவல் அதிகமாகும். கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊர டங்கு பலனற்றதாகி விடும்.

எனவே, நவ.16 முதல் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க முடிவு செய்த அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

பெற்றோர் கருத்து

அப்போது நீதிபதிகள், ‘‘ஆந் திரா உட்பட பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் கரோனா பரவல் அதி கரித்தது. பல நாடுகளில் கரோனா 2-வது அலை பரவி வருகிறது. நீதிபதிகள் உட்பட பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் சூழலில் குழந்தைகள், மாண வர்கள் பாதிக்கப்பட்டால் சிரமம் அதிகமாக இருக்கும். இதனால் டிசம்பர் மாதத்துக்கு பிறகு பள்ளி, கல்லூரிகளைத் திறக்கலாம் என நீதிமன்றம் கருதுகிறது. பள்ளி, கல்லூரிகளைத் திறப்பதில் பிற மாநிலங்களில் நடந்திருக்கும் நிகழ்வுகளை கருத்தில்கொண்டு அரசு உரிய முடிவெடுக்க வேண்டும்’’ என்றனர்.

அதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை நவ.20-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in