Published : 08 Dec 2021 04:07 AM
Last Updated : 08 Dec 2021 04:07 AM

தமிழகத்தில் புதிதாக 710 பேருக்கு கரோனா தொற்று :

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 411, பெண்கள் 299 என மொத்தம் 710 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

மேற்கு வங்கத்தில் இருந்துவந்த 2 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 126, கோவையில் 122 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

10 பேர் உயிரிழப்பு

தமிழகம் முழுவதும் 7,982பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று இளைஞர்கள், முதியவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,549 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x