Published : 03 Dec 2021 03:06 AM
Last Updated : 03 Dec 2021 03:06 AM
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, தமிழகத்தில் இருந்து இன்றுமுதல் 64 சொகுசு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: சபரிமலை செல்லும்பக்தர்களின் வசதிக்காக, மண்டல பூஜைமற்றும் மகர விளக்கு காலங்களில் தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து அரசுவிரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இந்த ஆண்டும் 64 சிறப்பு பேருந்துகள் இயக்க உரிமம் பெறப்பட்டுள்ளது.
அதன்படி, இன்றுமுதல் வரும் ஜன.16வரை சென்னை, திருச்சி, மதுரை, புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவைப்பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 30 நாட்களுக்கு முன்னதாக இணையதளங்கள் மூலம் (www.tnstc.in, www.redbus.in, www.busindia.com, www.paytm.com, www.makemytrip.com, www.goibgo.com) டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 9445014412, 9445014450, 9445014424, 9445014463 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT