Published : 23 Nov 2021 03:06 AM
Last Updated : 23 Nov 2021 03:06 AM

பயிற்றுமொழி விவரத்துடன் : 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வழங்க ஏற்பாடு :

தமிழகத்தில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதன்படி, ஒரு பதவிக்கு பட்டப் படிப்பு கல்வித்தகுதி எனில் பட்டப் படிப்பை மட்டுமின்றி அதற்கு முந்தைய தகுதிகளான 10 மற்றும்பிளஸ் 2 வகுப்புகளையும் தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும்.

இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டு முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்றுமொழி விவரத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் வழங்க அரசு தேர்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அரசுதேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மாஅனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

‘‘2021-2022-ம் கல்வி ஆண்டு முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழில் மாணவர் 1 முதல் 10-ம் வகுப்புவரை எந்த பயிற்றுமொழியில் படித்தார் என்ற விவரம் வகுப்புவாரியாக குறிப்பிட்டுவழங்கப்படவுள்ளது. எனவே, தலைமை ஆசிரியர்கள் எமிஸ் தளத்தில், தங்கள்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் 1முதல் 10 வரையிலான வகுப்புகளை எந்த மொழியில் பயின்றார் என்ற விவரத்தை தனித்தனியே பதிவேற்றம் செய்ய வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x