Published : 09 Nov 2021 03:08 AM
Last Updated : 09 Nov 2021 03:08 AM

பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் படிப்புகளுக்கு : விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நாளை கடைசி :

தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த 19 வகையான துணை பட்டப்படிப்புகள் உள்ளன. இப்படிப்புகளுக்கான 2021-22-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு நேற்று மாலை5 மணியுடன் நிறைவடைந்த நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தகுந்த ஆவணங்களுடன் செயலாளர், தேர்வுக் குழு, எண்.162, ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 600010 என்ற முகவரியில் நவ.10-ம் தேதி (நாளை) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

“மழையால் போனபைட் சான்றிதழைப் பெற முடியாத மாணவ, மாணவிகள், மாணவர் சேர்க்கை கலந்தாய்வின்போது, ‘போனபைட்’ சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்’’ என்று மருத்துவக்கல்வி இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x