Published : 09 Nov 2021 03:08 AM
Last Updated : 09 Nov 2021 03:08 AM

தமிழகத்தில் புதிதாக 841 பேருக்கு கரோனா :

சென்னை

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 505, பெண்கள் 336 என மொத்தம் 841 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

அதிகபட்சமாக சென்னையில் 129, கோவையில் 94 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 10,372 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று 6 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாதொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,226 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கி.வீரமணிக்கு கரோனா

இதற்கிடையே, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும்அவரது மனைவிக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சில தினங்களாக இருவருக்கும் கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்துள்ளன. இதையடுத்து, இருவரும் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ்சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பரிசோதனையில் இருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இருவரும் சில தினங்களில் வீடு திரும்புவார்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x