Published : 18 Oct 2021 03:09 AM
Last Updated : 18 Oct 2021 03:09 AM

தமிழகத்தில் புதிதாக 1,218 பேருக்கு கரோனா தொற்று :

சென்னை

தமிழகத்தில் புதிதாக 1,218 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. முதியவர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் நேற்று ஆண்கள்714, பெண்கள் 504 என மொத்தம்1,218 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 156, கோவையில் 132 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 26 லட்சத்து 87,092 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 26 லட்சத்து 36,379 பேர் குணமடைந்துள்ளனர். நேற்றுமட்டும் 1,411 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகம் முழுவதும் 14,814 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்று இளைஞர்கள், முதியவர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக கோவையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 35,899 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 8,526 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத் துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x