Published : 14 Oct 2021 05:54 AM
Last Updated : 14 Oct 2021 05:54 AM

ஸ்பெயின் சதுரங்கப் போட்டியில் பட்டம் வென்றார் இனியன் :

ஸ்பெயின் நாட்டில் நடந்த சர்வதேச அளவிலான சதுரங்கப் போட்டியில் ஈரோட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ப.இனியன் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.

ஸ்பெயின் நாட்டின் லா-நூசியாநகரில் சர்வதேச செஸ் போட்டி நடைபெற்றது. இதில் 14 நாடுகளைச்சேர்ந்த 88 வீரர்கள் பங்கேற்றனர். இந்தத் தொடரில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற ஈரோட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ப. இனியன் 6 ஆட்டங்களில் வெற்றியும் 2 போட்டிகளை டிராவும் செய்து 7 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றார். சிலியைச் சேர்ந்த ரோட்ரிகோ வாஸ்சியூஸ் 2-வது இடமும், உக்ரைனின் ஆண்ட்ரோ சுமித் 3-வது இடமும் பெற்றனர்.

ஏற்கெனவே ஒப்புக் கொண்டபடி, சூப்பர் செஸ் லீக் ஆன் லைன் போட்டியில் இனியன் பங்கேற்றதால், ஸ்பெயின் போட்டி யின் 8-வது சுற்றில் இனியன் பங்கேற்கவில்லை. இருப்பினும் சிலி, ஸ்பெயின், கியூபா உள்ளிட்ட நாடுகளின் சர்வதேச வீரர்களை வென்றதன் மூலம் இனியனுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x