

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட நடிகர் தம்பதியர் நாக சைதன்யா - சமந்தா பிரிந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.
தென்னிந்திய திரையுலகில்முன்னணி நடிகையாக வலம்வருபவர் சமந்தா. நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவும், சமந்தாவும் காதலித்து வந்தனர். இருவரும் கடந்த 2017 அக்.6-ம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.
இந்த நிலையில் கடந்த சிலநாட்களாகவே, நாக சைதன்யா - சமந்தா இருவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதுதொடர்பாக இருவரும் எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடாமல் இருந்தனர்.
இந்நிலையில், கணவன்- மனைவி என்ற திருமண பந்தத்தில் இருந்து பிரிந்துவிட்டதாக இருவரும் தற்போது கூட்டாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக நாக சைதன்யா நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
எங்கள் நலன் விரும்பிகளுக்கு இதை சொல்லிக் கொள்கிறோம். நீண்ட யோசனைக்குப் பிறகு, நானும் சமந்தாவும் கணவன் - மனைவியாக தொடரப்போவது இல்லை என்று முடிவுசெய்துள்ளோம். 10 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களுக்குள் நட்பு இருந்தது. அதை நாங்கள் பெரும் பொக்கிஷமாக கருதுகிறோம். அந்த நட்புதான் எங்கள்உறவுக்கு அடிப்படை. இனியும்கூட, எங்களுக்குள் அந்த நட்பின் நிமித்தமான பிரத்யேக பிணைப்பு தொடரும். இந்த கடுமையான காலகட்டத்தில் நண்பர்கள், நலன் விரும்பிகள், ஊடகங்கள் எங்களை ஆதரிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். எங்கள் தனிநபர் சுதந்திரத்தை கருத்தில் கொள்ளவேண்டுகிறோம். அனைவருக் கும் நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சமந்தாவும் இந்த அறிவிப்பை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
தென்னிந்தியத் திரையுலகில் பிரபலமாக இருந்த நாகசைதன்யா - சமந்தா ஜோடி பிரிந்திருப்பது அவர்களது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.