Published : 15 Jun 2021 03:12 AM
Last Updated : 15 Jun 2021 03:12 AM

தமிழகத்தில் பரிசோதனை 3 கோடியை கடந்தது - புதிதாக 12,772 பேருக்கு கரோனா :

தமிழகத்தில் கரோனா பரிசோதனை 3 கோடியைக் கடந்தது. நேற்று புதிதாக 12,772 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் நேற்று ஆண்கள்7,245, பெண்கள் 5,527 என மொத்தம் 12,772 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக கோவையில் 1,728,ஈரோட்டில் 1,295, சென்னையில் 828 பேருக்கு வைரஸ் தொற்றுஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 23 லட்சத்து 66,493 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 36,884 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

254 பேர் உயிரிழப்பு

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நடுத்தர வயதினர், முதியவர்கள் உட்பட 254 பேர்உயிரிழந்தனர். சென்னையில் 28பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 3 கோடியே 1 லட்சத்து 38,294 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 1 லட்சத்து 70,256 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x