Published : 11 Jun 2021 03:12 AM
Last Updated : 11 Jun 2021 03:12 AM
சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்,திருநங்கைகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று கடந்த மாதம் 27-ம் தேதி உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், நல வாரியம் மூலம் 11,449 திருநங்கைகள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களில் குடும்ப அட்டை வைத்திருக்கும் 2,956 பேருக்கு முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் நிதி வழங்கப்பட்டுவிட்டது. மற்றவர்களுக்கும் நிவாரணம் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
இதுபற்றி சமூகநலத் துறை அதிகாரிகள் கூறியபோது, ‘‘குடும்ப அட்டை இல்லாமல் திருநங்கைகள் நல வாரியத்தில் பதிவுசெய்திருந்தவர்களின் பட்டியல் அடிப்படையில், தகுதியுள்ள திருநங்கைகளுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT