Published : 08 Jun 2021 03:12 AM
Last Updated : 08 Jun 2021 03:12 AM
கரோனா 2-வது அலையில் தமிழகத்தில் 32 பேர் உட்பட நாடு முழுவதும் 646 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பாக இந்திய மருத்துவ சங்கத் தலைவர் ஜெ.ஏ.ஜெயலால் கூறியதாவது:
முதல் அலையில் 754 பேர்
கரோனா தொற்றின் முதல் அலையில் நாடு முழுவதும் 754 மருத்துவர்கள் உயிரிழந்தனர். இதில், 168 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு மட்டுமே நிவாரண உதவி வழங்கப்பட்டது. தமிழகத்திலும் 80 மருத்துவர்கள் உயிரிழந்த நிலையில் சிலருக்கு மட்டுமேநிவாரண உதவி கிடைத்தது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன், தொற்றால் உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கினார்.கரோனா 2-வது அலையில் தமிழகத்தில் 32 பேர் உட்பட நாடு முழுவதும் 646 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். கரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டுதொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அனைத்து மருத்துவர்களின் குடும்பங்களுக்கும் நிவாரண உதவிகளை மத்திய, மாநில அரசுகள் விரைவாக வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும். மருத்துவர்களுக்கு பணிச் சுமை அதிகரித்துள்ளதால், கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT