Published : 03 May 2021 03:15 AM
Last Updated : 03 May 2021 03:15 AM

தமிழகத்தில் புதிதாக : 20,768 பேருக்கு : கரோனா தொற்று :

தமிழகத்தில் தினசரி கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கியது. முதியவர்கள் உட்பட 147 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை நேற்று வெளியிட்டசெய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 12,375, பெண்கள் 8,393 எனமொத்தம் 20,768 பேர் கரோனாவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 6,078, செங்கல்பட்டில் 1,582,கோவையில் 1,441, திருவள்ளூரில் 1,049, மதுரையில் 880 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 12 லட்சத்து 7,112 ஆக அதிகரித்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நடுத்தர வயதினர், முதியவர்கள் உட்பட 153 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் 29 பேர் இறந்துள்ளனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x